STR DIVISION மற்றும் CHENNAI TRAFFIC DIVISION இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் சென்னை 07_01_2026
தோழர்களே தோழியர்களே வணக்கம்.நேற்று மாலை பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் 3.30 மணிமுதல் 4.30 மணி வரையில் தமிழ்மாநில சங்கத்தின் கௌரவ தலைவர் தோழர்V. ராமாராவ் மற்றும் STR Division கௌரவ தலைவர் தோழர். A. சுகுமாரன் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநிலச் சங்கத்தின் முடிவின்படி, STR Division மற்றும் Traffic Division Chennai,தோழர் தோழியர்கள் மற்றும் சில சென்னைதொலைபேசி தோழர்களும் ஆக 70 க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டனர்.
.
தோழர் N. S. தீனதயாளன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
முதலில் சொசை.ட்டி நிர்வாகத்தை கண்டித்து, தோழர்கள்
S. ராமகிருஷ்ணன், C. B. SUNDARABABU
சோலைராஜ் முத்தியாலு மற்றும் தோழியர் செல்லம்மாள் சுப்ரமணியன் ஆகியோர் கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து
தலைவர்
A. சுகுமாரன் அவர்கள் Special Officer நியமிக்க வேண்டும் என்றும் தலைவர்
V. ராமா ராவ் அவர்கள் மாநில அளவில் தன்னால் முடிந்ததை செய்வதாக கூறினார். தலைவர்
K. முத்தியாலு அவர்கள் Registrar of Co operative Societies அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் தான் நமது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
தலைவர் R. வெங்கடாசலம் அவர்கள் சென்னையிலிருந்து டெல்லிக்கு சொசைட்டியின் செயல்பாடுகள் குறிப்பு அனுப்பப்பட்டு விட்டதாக, RTI மூலமாக தெரியவந்துள்ளது என்று கூறினார்.
மாநில செயலாளர் தலைவர்
S. SUNDARAKRISHNAN அவர்கள் தலைவர் DG அவர்கள் தமிழ்நாடு மற்றும் சென்னை தொலை பேசி மாநில செயலாளர்கள் டெல்லி சென்று Registrar of Co operative Societyஅவர்களை சந்திக்க முயற்சி மேற்க்கொண்ட சமயம் அவர் மாற்றப்பட்டுவிட்டார் என்ற தகவலை கூறினார்.சொசைட்டியிலிருந்து பணத்தை மீட்க சிறந்த வழிகளை பயன்படுத்த முயல வேண்டும் என்றார்.கால தாமதமானாலும் நிச்சயம் அனைவருக்கும் பணம் திரும்ப கிடைக்கும் என்றார்.
தோழர் துரை கணேசன் அவர்கள்தலைவர்கள் வழி நடக்க நாங்கள் தயார் என்று கூறினார்
.கூட்டத்தில் பேசிய அனைவரும் இந்த மாதம் 27 ந்தேதி நடைபெறவுள்ள தமிழ் மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து சென்னையில் நடத்தவுள்ள போராட்டத்தில் சொசைட்டியால்
பாதிக்கப்பட்ட தோழர்களும் மற்றும் நமது உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்றனர்.
தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட செயலாளர்
N. S. தீனதயாளன் அவர்கள் நன்றி கூறி நிறைவு செய்தார்.
S. ராமகிருஷ்ணன் கோஷத்துடன் கூட்டம் முடிந்தது.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.