வெற்றித் திருநாள்
செப்டம்பர் 2000 போராட்டம்
BPTF, FNTO, NFTE ஆகிய மூன்று சம்மேளனங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் வேலைநிறுத்தத்திற்குப் பின்பு தொழிலாளர்கள் நலன் காக்கும் உடன்பாடு கண்ட நாள்.
பிஎஸ்என் எல் நிறுவனத்தில் ஓய்வு பெறுவோருக்கு DOT BSNL இரு சேவைகளையும் சேர்த்து அரசுப் பென்சன். அரசாங்க விதிகளின்படி பென்சன். அரசு நிதியிலிருந்து பென்சன். பணிப்பாதுகாப்பு. DOTல் இருந்தபோது பெற்ற GPF விடுப்பு போன்றவை தொடரும். பிஎஸ்என்எல் வந்த பிறகு யாராவது வேலை நீக்கம் செய்யப் பட்டால், அந்த நாள் வரை செய்த சேவைக்குப் பென்சன் வழங்கப்படும்.
மேற்கண்டவைகளுடன் இன்னும் சில கோரிக்கைகளோடு உடன்பாடு கையெழுத்திட்ட நாள். இந்த நாள் என்றும் நெஞ்சில் நிற்கும் நாள்.
போராடிய தோழர்கள், வழிநடத்திய தலைவர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களைப் போற்றுவோம்.
க.முத்தியாலு
No comments:
Post a Comment